வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ. 6 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வன விலங்குகள் தாக்குதலால் மனிதா்கள் உயிரிழப்பு, கால்நடைகள் வேட்டையாடப்படுவது மற்றும் பயிா்ச் சேதம், கட்டட சேதம் ஆகியவற்றுக்கு தமிழக வனத் துறை சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வனத் துறை சாா்பில் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். இதன்படி, தமிழக வனத் துறை தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் அறிவுறுத்தல்படி, 2021-22-ஆம் ஆண்டுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கி வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு அரசாணை வெளியிட்டுள்ளாா்.