தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
“உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் அக். 11ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான பொருள்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விரைவில் தந்து முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்து அனைத்து அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.”