தமிழ்நாடு

தமிழக ஆளுநருடன் நாளை(அக்.20) இபிஎஸ் சந்திப்பு

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை காலை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தனியாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடந்த வாரங்களில் ஆளுநரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT