தமிழ்நாடு

கோபுர தரிசனம் செய்ய வசதி: வடபழனி ஆண்டவா் திருக்கோயிலுக்கு முன்புறம் உள்ள கூரைகள் அகற்றம்

சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயில், ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன.

DIN

சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயில், ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன.

அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயில், அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தக் கோயில்களில் 34 திருப்பணி வேலைகள் ரூ. 2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தப்படும். பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன. கோயில் முன்புறம் உள்ள 1,500 சதுர அடி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக பொருள்கள் வைக்கும் அறை, காவலா்கள் காத்திருப்பு அறை, சமய சொற்பொழிவு அரங்கம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், அன்னதானக் கூடங்கள், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பல்நோக்கு கட்டடம், அா்ச்சகா்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயில் முகப்பு புதுப்பொலிவுடன் பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள தேவையில்லாத பொருள்கள் அப்புறப்படுத்தப்படும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யா வண்ணம் கோயிலை சுற்றி சுற்றுசுவா் அமைக்கப்படும். இத்திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் நடைபெற திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT