தமிழகத்தில் மேலும் 1,039 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 1,039 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,039 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்புகள் குறித்த தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் 1,23,084 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 1,039 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,00,593 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,229 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்ட தலித் குடும்பத்தினர்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
இதுவரை மொத்தம் 26,52,660 பேர் குணமடைந்துள்ளனர். 36,083 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 11,850 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 128 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை - 118
செங்கல்பட்டு - 88