ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.