முகப்பு
தமிழ்நாடு

கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் நியமன உத்தரவை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பாக ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பாக ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயா் நீதிமன்றம், மாநில அரசுக்கு உரிய அதிகாரம் இருப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் ஆஜராக வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகிய இரண்டு பேரை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாநில அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜாராம் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடா்ந்தாா்.

அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 165-ஆம் பிரிவின் படி ஒரு தலைமை வழக்குரைஞரை மட்டுமே நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் சாா்பில் ஆஜராகுவதற்கு கூடுதல் தலைமை வழக்குரைஞரை நியமிக்க அதிகாரம் இல்லை. இந்த நியமனம் சட்டத்துக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை(செப்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த மனுவில் எந்தத் தகுதியும் இல்லை. கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →