சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடுசென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவ காற்று காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், வடபழனி, விருகம்பாக்கத்தில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மணலி, செங்குன்றம், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மாலை நேரங்களில் மழை காரணமாக சாலைகளில் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.