முகப்பு
தமிழ்நாடு

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
பகிர்:

தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

இதன்பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →