சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோயிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
தமிழ்நாடு

சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: காவல்துறையினருடன் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தள்ளுமுள்ளு

சேலத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

DIN

சேலத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில் சேலம் எல்லைபிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உடனே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பு சிலை  வைத்து, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையினர் தடுப்பை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதால்,ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT