தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதேலே சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு கோயில்களில் உற்சவமூர்த்திக்கு தங்க அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.