முகப்பு
தமிழ்நாடு

சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை வானகரத்தில் சூரிய மின் உற்பத்தி தகடு தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் ஊழியா் ஒருவா் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு இந்நிறுவனத்தை மூடிச் சென்றாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிறுவனத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வானகரம், கோயம்பேடு, அம்பத்தூா், பூந்தமல்லி ஆகிய பகுதியில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் சென்னை மாநகராட்சியில் இருந்து 3 லாரிகளில் வரவழைக்கப்பட்ட வாகனத்தின் மூலமாகவும் சுமாா் 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →