தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணிந்த பாரதி

DIN


காஞ்சிபுரம் நகரில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

முகாமுக்கு வருபவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாகவி பாரதி முகக்கவசம் அணிந்தவாறு ஓவியம் வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

தடுப்பூசி போட வந்த பலரும் முகக்கவசம் அணிந்த பாரதி ஓவியம் வரைய வைக்கப்பட்டிருந்த கரும்பலகையை பார்வையிட்டதுடன் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டினர். 

பாரதியார் நினைவு நாளன செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த ஓவியம் வரையப்பட்டு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டதாக அப் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT