முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்
பகிர்:

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மனிதவள மேலாண்மைத் துறையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், கரோனாவுக்கு பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →