முகப்பு
தமிழ்நாடு

'நாளை முதல் பொறியியல் கலந்தாய்வு: அனைவருக்கும் இடம் கிடைக்கும்'

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையம் வாயிலாக நாளை முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Updated On : 14 செப்டம்பர் 2021, 1:31 pm IST
அமைச்சர் பொன்முடி (கோப்புப் படம்)
பகிர்:

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையம் வாயிலாக நாளை முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 44 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 1,74,930 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. 

இந்த ஆண்டு இணையம் மூலமாக 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.