மா. சுப்பிரமணியன் 
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் செப். 17ல் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

DIN

தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு கடந்த செப்.12(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இதில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 40,000 தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 20 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

மேலும், இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் முதல் மக்கள் வரை வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மேலும், தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், இரு தினங்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT