தமிழ்நாடு

பெரிய ஓபுளாபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வில் பெரியஓபுளாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செவ்வந்தி மனோஜ் தலைமை தாங்கி பல்வேறு நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி துணைத் தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் வேத நாராயணன்,வார்டு உறுப்பினர்கள் ராஜா, செல்வி மன்னார், ஜெயலட்சுமி சம்பத், சிவகாமி குமரகுரு, மோகனப்பிரியா யுவராஜ், சீனிவாசன், எல்லப்பன், ரேகா பழனி, முரளிதரன்(எ) தாஸ், கல்லுமுத்து, யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் காலி இடங்களில் மரக்கன்றுகள் தொடர்ந்து நடும் பணி நடைபெறும் என ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ் நிகழ்வின்போது தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT