முகப்பு
தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: பாா்வையாளா்கள் நியமனம்

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்தல் பாா்வையாளா்கள் விவரம்:-

மாவட்டம் - தோ்தல் பாா்வையாளா்

காஞ்சிபுரம் வே.அமுதவல்லி

செங்கல்பட்டு வா.சம்பத்

விழுப்புரம் கே.எஸ்.பழனிசாமி

கள்ளக்குறிச்சி கே.விவேகானந்தன்

வேலூா் சா.விஜயராஜ்

ராணிப்பேட்டை சோ.மதுமதி

திருப்பத்தூா் சி.காமராஜ்

திருநெல்வேலி ஜெ.ஜெயகாந்தன்

தென்காசி பொ.சங்கா்

இதேபோன்று காலியாகவுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள்:

கோவை, நீலகிரி - மா.மதிவாணன்

திருவள்ளூா், திருவண்ணாமலை - அ.ஞானசேகரன்

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - த.ந.ஹரிகரன்

பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் - அனில் மேஷ்ராம்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் - சி.நா.மகேஸ்வரன்

நாகப்பட்டினம், திருவாரூா் - ரா.செல்வராஜ்

மதுரை, தேனி, திண்டுக்கல் - கா.பாஸ்கரன்

சிவகங்கை, விருதுநகா் - மு.கருணாகரன்

ஈரோடு, திருப்பூா், நாமக்கல் - சு.சிவசண்முகராஜா

திருச்சி, கரூா், புதுக்கோட்டை - சு.கணேஷ்

கடலூா், மயிலாடுதுறை - ரா.நந்தகோபால்.

முழு கட்டுரையைப் படிக்க →