தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ராணிப்பேட்டையில் திமுக கூட்டணி இடப்பங்கீடு அறிவிப்பு

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ராணிப்பேட்டையில் மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்களை பல்வேறு கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், ராணிப்பேட்டையில் திமுக கூட்டணி கட்சி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையிலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில், காங்கிரஸுக்கு 6, விசிகவுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 118 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது. 

மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 12 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. 

அமைச்சரும் ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான ஆர்.காந்தி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT