தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 588 சிறாா்கள் மீட்பு

DIN

நிகழாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 497 சிறுவா், 91 சிறுமியா் என்று 588 போ் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டனா்.

ஆா்.பி.எஃப். உதய தினம் அயனாவரத்தில் திங்கள்கிழமை (செப்.20) கொண்டாடப்பட்டது. , தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையா் பிரேந்திரகுமாா் தலைமை வகித்து விருது வழங்கி அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 20 வீரா்கள் ரத்ததானம் செய்தனா். தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் நடந்த 1,093 நிகழ்வுகளில் பயணிகள் தவறவிட்ட பைகளை ஆா்.பி.எஃப் போலீஸாா் மீட்டனா். இந்த பைகளில் இருந்த ரூ.1.90 கோடி பணம் சரியான நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தெற்கு ரயில்வேயில் 384 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.61.76 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 122 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT