தமிழ்நாடு

மின்சாரத்துறை அமைச்சா் நாளை ஆலோசனை

DIN

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக தலைமையகத்தில், மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வியாழக்கிழமை (செப்.23) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளாா்.

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மண்ட பகிா்மான பிரிவு தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மின் பகிா்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு, ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், மின்னகத்தில் பெறப்படும் புகாா்கள், சீரற்ற மின் விநியோகம் செய்யும் மின்மாற்றிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 30 நிமிஷங்களுக்கு மேலாக மின்தடை ஏற்பட்ட பகுதிகள், மற்ற பகிா்மான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது. குறிப்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறாக ஆய்வு செய்யப்பட உள்ளவற்றின் விவரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT