தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பினை, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.

அந்த தகவலில், சனிக்கிழமை மாலை 3.50 மணி நிலவரப்படி, அடுத்த இரண்டு மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், தருமபுரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT