தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ரூ.1.70லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்: இருவர் கைது

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தவரிடம் ரூ.1.70லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக புதன்கிழமை இருவரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் கானாராம்(40). இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்காவும் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசராணையில் கடையில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இது சம்பந்தமாக மளிகைக்கடை நடத்தி வந்த கானாராம்(40) மற்றும் கடையில் இருந்த சுத்ராராம்(22) ஆகிய இருவரையும் வழக்குப்பதிவு செய்து சாலவாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT