முகப்பு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பகிர்:

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

தற்போது கரோனா குறைந்துள்ள நிலையில் பெற்றோர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →