முகப்பு
தமிழ்நாடு

7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
பகிர்:

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தீபா சத்யன் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாகப் பதவி வகித்துவரும் இளங்கோ, சென்னை ரயில்வே  எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழு எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் ஜெயந்தி, சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாகப் பதவி வகித்துவரும் கல்பனா நாயக், சென்னை ரயில்வே ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →