மேட்டூர் அணை நீர்மட்டம்112.95 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 11 2.28 அடியிலிருந்து 112.95 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 11 2.28 அடியிலிருந்து 112.95 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின காரணமாக புதன்கிழமை காலை வினாடிக்கு 10,904 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு 12,165 கன அடியாக அதிகரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைப்பு: மக்கள் மகிழ்ச்சி
அணையின் நீர் இருப்பு 82.67 டி.எம்.சி. ஆக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.