முகப்பு
தமிழ்நாடு

சென்னை திரும்பினாா் முதல்வா்

தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினாா்.

4 நாள்கள் பயணமாக தில்லி சென்றிருந்த அவா், அங்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரை சந்தித்துப் பேசியதுடன், தமிழகம் நலன் சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் அவா்களிடம் அளித்தாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்த மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாதிரி பள்ளியை பாா்வையிட்டாா். தில்லியில் கட்டப்பட்ட திமுக அலுவலகத்தையும் திறந்து வைத்தாா். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு விமானம் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.