முகப்பு
தமிழ்நாடு

ஸ்மாா்ட் வகுப்பறைகள்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

சென்னை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975-இன் கீழ் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி 1981-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம் அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலா்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலா்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிா்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அந்த வளாகத்தில், ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிா் சாதன வசதியுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறைகள் மற்றும் 15 குளிா் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →