முகப்பு
தமிழ்நாடு

7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது

7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
மட்டப்பாறை அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் சகுனம் கேட்கும் ஊர் முக்கியஸ்தர்கள்.
பகிர்:


மணப்பாறை: 7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஊராட்சி மட்டப்பாறையில் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அருள்மிகு பத்திரகாளியம்மன்

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவிற்கு பிறகு நிகழாண்டு நடைபெறும் திருவிழாவிற்கு சகுனம் கேட்கும் நிகழ்வில் கடந்த மூன்று நாள்களாக ஊர் முக்கியஸ்தர்கள் ஆலயத்தில் காத்திருந்த நிலையில், தற்போது சகுனம் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 12-ஆம் செவ்வாய்க்கிழமை தேதி பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மூன்று மாத கணக்கின்படி திருவிழா நடைபெறும் தேதிகள் முடிவு செய்யப்படும் என ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.