புஷ்ப பல்லக்கு விழாவில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த மகாமாரியம்மன்.  
தமிழ்நாடு

நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா

நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை தரிசனம் செய்தனர். 

நீடாமங்கலம் தமிழ் இளைஞர்கள் பக்தர்கள் கழகத்தினர் நடத்தும் 37ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25 ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சதுர்வேத வினாயகர், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்படுகிறது.

நீடாமங்கலம் மகாமாரியம்மன்

அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை காலை தீர்த்தவாரி நடந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT