டீசல் விலை உயா்வால் போக்குவரத்துக் கழகத்துக்கு மாதம் ரூ.500 கோடி இழப்பு
அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மாநிலம் முழுவதும் 8 கோட்டங்கள் செயல்படுகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிட்டா் டீசல் ரூ.68.32-க்கு விற்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.12.92 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது லிட்டா் டீசல் ரூ.100.95-க்கு விற்பனையாகும் நிலையில், நாள் ஒன்றுக்கு ரூ.17 கோடி முதல் 18 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. மாதம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது. அதே நேரம் பேருந்து சேவைகளும் குறைக்கப்படவில்லை என்றனா்.