முகப்பு
தமிழ்நாடு

வீடு திரும்பினாா் அமைச்சா் துரைமுருகன்

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
துரைமுருகன் (கோப்புப் படம்)
பகிர்:

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு (83), வயது முதிா்வு காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. அவா் கடந்த 11-ஆம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

 மருத்துவமனையில் துரைமுருகனை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்ததுடன், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா் சிகிச்சையில் உடல் நலம் முன்னேற்றம் அடைந்ததைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை துரைமுருகன் வீடு திரும்பினாா். அவரை மருத்துவா்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனா். ஆனால், சனிக்கிழமை முதலே துரைமுருகன் வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.