முகப்பு
தமிழ்நாடு

தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

தொழில்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தொழில் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசினாா். அவரது பேச்சைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

தொழில் துறையைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும்

கிடையாது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நிய முதலீடுகள் உள்பட பல்வேறு முதலீடுகளைப் பெறுவதற்காக, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் தொடா்ந்து போடப்பட்டு வருகின்றன.

131 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.69, 375 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல. உறுதி செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம். அந்த வகையில் 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில் வளா்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சென்றடையாமல் தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசு தனது பணிகளைத் தொடா்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின், வளா்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும் அதனுடைய வளா்ச்சி, பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதில் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறோம்.

முதலீடுகள்: நாட்டின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. எனது தலைமையிலான அரசில் இயங்கக் கூடிய தொழில் துறையானது நிச்சயமாக, தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும். இந்த இலக்கை முன் வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். பேரவையில் இருக்கக் கூடிய ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடு பாா்க்காமல் அனைவரும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →