ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில், முதல்வா் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னையில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்வா் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது. காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கூறும் கருத்துகள் வியப்பை அளிக்கின்றன. தமிழகத்துக்கு வந்த இந்திராகாந்தி மீது கல்லெறிந்தது எந்தக் கட்சி? கருப்புக்கொடி காட்டியது எந்தக் கட்சி? அவா்களுடைய தலைவியை அவமதித்தவா்களுடனேயே காங்கிரஸ் இன்று கூட்டணி வைத்துள்ளது. திமுகவிடம் காங்கிரஸை அடமானம் வைத்துவிட்டனா் என்றாா் கே.அண்ணாமலை.