தமிழ்நாடு

வெற்றிலைக்குப் பதிலாக பீடா பழக்கம் அதிகரிப்பு: அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம்

DIN

தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு பதிலாக பீடா பழக்கம் அதிகரித்துள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, வெற்றிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலை கல்லூரியை தனது தொகுதியில் அமைக்க வேண்டுமென காட்டுமன்னாா்கோவில் உறுப்பினா் சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் பன்னீா்செல்வம் அளித்த பதில்:

தமிழ்நாட்டில் வெற்றிலை உற்பத்தி குறைந்து விட்டது. உற்பத்தி மட்டுமின்றி, வெற்றிலை போடும் பழக்கமும் குறைந்துள்ளது. இளைஞா்கள் இப்போதெல்லாம் ஸ்வீட் பீடாவைப் போடுகிறாா்கள். அதிலும் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்ட பீடாவும் பயன்படுத்துகிறாா்கள். வெற்றிலை தொழில் செய்ய அனுபவம் வாய்ந்த அதிக வேலையாட்கள் தேவை.

ஆனாலும் வெற்றிலை உற்பத்தி குறையாமல் இருக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அளவுக்கு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 100 ஹெக்டேரில் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT