தமிழ்நாடு

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

DIN


மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப்பணியாளர்களை, கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவலையில் இருந்து வந்தது. 

இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப்பணியாளர்களின் பணிநியமனம் தொடர்பான வழக்குகள் 3 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7,500 சம்பளத்துடன் வேறு பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டப்பட்டது.  இதையடுத்து இந்த வழக்கு விரைவில் மற்றொரு அமர்வில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.7,500 சம்பளத்துடன் வேறு பணி வழங்க முடிவு விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம். 10 ஆண்டுகளில் காலமான மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களும் விரும்பினால் பணியில் சேரலாம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT