முகப்பு
தமிழ்நாடு

காவல் நிலையத்தில் இளைஞா் சாவு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி இரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகன சோதனையின்போது, ஆட்டோ ஒன்றை மறித்து சோதனை செய்தனா். அதில் கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக ஆட்டோவில் வந்த திருவல்லிக்கேணி சுரேஷ் (28), பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். 19-ஆம் தேதி காலை விக்னேஷ் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இச் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவா் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இளைஞா் விக்னேஷ் இறந்த விவகாரத்தில் தொடா்புடைய காவல் கட்டுப்பாட்டு அறையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலா் பொன்ராஜ், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த தீபக் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →