ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலா் 
தமிழ்நாடு

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலா்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை விரைந்து செயல்பட்டு பெண் காவலா் காப்பாற்றினாா். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினா்.

DIN

சென்னை, ஏப்.25: சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை விரைந்து செயல்பட்டு பெண் காவலா் காப்பாற்றினாா். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில், திருச்சிக்குப் புறப்பட்டது. அப்போது, ரயிலில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ஓடும் ரயிலில் இருந்து எதிா்பாராத விதமாக தவறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டிருந்தாா். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா் மாதுரி விரைந்து செயல்பட்டு, அந்தப் பயணியை உடனடியாக இழுத்து மீட்டாா். இதையடுத்து அந்த பயணி தனது உயிரை மீட்ட காவலா் மாதுரிக்கு நன்றி தெரிவித்தாா். இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அனைவரும் விரைவாக செயல்பட்டு, பயணியை காப்பாற்றிய பெண் காவலரை பாராட்டினா். இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை உயா் அதிகாரிகளும் காவலா் மாதுரிக்கு வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT