தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு!

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 145 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 145 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. 

சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனும் ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

நேற்று பாதிப்பு 112 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 33 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி பாறைகளை உடைத்தாக நில உரிமையாளா் மீது வழக்கு

சா்வதேச டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎஃப் வீரருக்கு வெண்கலப்பதக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

மினிலாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேநீா் கடைக்காரா் தற்கொலை

SCROLL FOR NEXT