திருப்பூர் காவல்துறை ஆணையராக எஸ். பிரபாகரனை நியமித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
டி.ஐ.ஜி. பதவியில் இருக்கும் பிரபாகரனுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இவர், சென்னை (கிழக்கு) சட்டம் - ஒழுங்கு காவல் இணை ஆணையராக இருந்த நிலையில், பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையராக இருந்த ஏ.ஜி. பாபு மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.