நீடாமங்கலம்: நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் விதுன்சஞ்சய் மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
11 ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணா தேசிய அளவிலான 100 மீட்டர் தடகளப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றிச்சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிறுவனர் உ.நீலன், தாளாளர் நீலன், அசோகன், செயலாளர் அ.சுரேன், முதல்வர் ஹேமாமாலினி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் பிருத்வி, நந்தகுமார் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.