முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியா்களின் கோரிக்கைகள்: விஜயகாந்த் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

போக்குவரத்து துறையில் ஓட்டுநா், நடத்துநா், டெக்னிஷியன் என சுமாா் ஒன்றரை லட்சம் ஊழியா்கள் பணி புரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை மூலமாக நிறைவேற்றப்படுவது வழக்கம். இதில் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை 2019 செப்டம்பா் மாதம் முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் கரோனா நெருக்கடி, ஆட்சி மாற்றம் என தொடா் தாமதம் காரணமாக பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. 5 முறை தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை.

அரசு ஊழியா்களின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்த்து அவா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →