தமிழ்நாடு

மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

DIN


சென்னை: மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என்றும் சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். 

அதில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் 1997 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் மாநில மனித உரிமை ஆணையம் அமைத்தார். உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதிலும், மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம். 

சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம், மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என கூறினார்.  

விழாவின் போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை வெளியிட்டார். பின்னர், திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT