தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

DIN


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 26 ஆவது நாள்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

அணைக்கு வியாழக்கிழமை காலை 8 நிலவரப்படி, வினாடிக்கு 1,40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,40,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

SCROLL FOR NEXT