தமிழ்நாடு

கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு: நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது

கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை பாலம் இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. 

DIN

தஞ்சாவூர்: கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை பாலம் இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. 

தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஓடுகிறது. இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

கல்லணை கால்வாய் ஆற்றில் வினாடிக்கு 3,221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், நீரின் வேகம் காரணமாக ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்து, பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. இதை கவனிக்காத மக்கள் ஆபத்தான முறையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  

முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பொதுப்பணித் துறையினர் மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT