பிரபல செய்தி வாசிப்பாளா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்
பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-
அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்று விட்டது சரோஜ் நாராயணசுவாமியின் குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அவரது குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது. இதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.