சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி பலி 
தமிழ்நாடு

சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி பலி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார்.

DIN


சென்னை : சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார்.

குரோம்பேட்டையில் அஸ்தினாபுரம் பகுதியில், பொழிச்சலூர் - அஸ்தினாபுரம் இடையே இயக்கப்படும் 52எச்  என்ற மாநகரப் பேருந்து, சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவி லட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT