தமிழ்நாடு

செப்.3-ல் கேரளம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் 

செப்.3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கேரளம் செல்கிறார்.  

DIN

செப்.3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கேரளம் செல்கிறார். 

கேரள மாநிலம் செல்லும் அவர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

29ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் நடைபெற்ற நிலையில் இந்த முறை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைக் கொண்டது தென் மண்டல குழு. 

பொதுவாக, தென்மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார். அதன் துணைத் தலைவர் பொறுப்புக்கு தென்னிந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே வாக்குவாதம்!

நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!

மத்திய பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 - ஒரு பார்வை!!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT