தமிழகத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதையும் படிக்கலாம் | 'இலவசங்கள் ஒருபோதும் இலவசம் அல்ல; வாக்காளர்களுக்கு அதன் தாக்கம் தெரிய வேண்டும்' - அசிமா கோயல்
மேலும், காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
விடுமுறைக்கு பின்னர், அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.