கோவையில் பூத்தது நிஷா காந்தி மலர்கள்!
குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள் நம்ம கோவையில் பூத்துள்ளது.
குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள் நம்ம கோவையில் பூத்துள்ளது.
நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. தமிழக - கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷாகந்தி மலர் செடிகள் அதிக அளவில் உள்ளன.
அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவை பகுதியில் இந்த வியக்கத்தக்க மலர்கள் மலர்ந்துள்ளன. செல்வபுரம் நாடார் வீதியில் கவின் என்பவரது வீட்டில் இந்த நிஷா காந்தி மலர்கள் 12 மலர்ந்துள்ளன. இந்த அதிசய மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு வியப்படைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.